டெல்லியின் புறநகர்ப்பகுதியில் தையல்காரருக்கும் 30 வயது பெண் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் தையல்காரர் அந்தப் பெண்ணைக் குத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது சகோதரிக்கு எதிராக அந்தத் தையல்காரர் தகாத முறையில் பேசியது குறித்து அந்தப் பெண், தையல்காரரைத் தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் மூண்டது. ஆத்திரத்தில் ப்ரிஜேஷ் என்ற அந்தத் தையல்காரர் கத்தரிக்கோலை எடுத்து அந்தப் பெண்ணை முகத்தில் குத்தினார்.
“அந்தப பெண்ணின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண், அதே நாளில் வீடு திரும்பினார்,” என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ப்ரிஜேஷ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.