இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள முஃப்ஸஃபாபூர் நகரில் மூளைக் காய்ச்சலால் குறைந்தது 129 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். நோய்ப்பரவல் கடந்த மாதம் தொடங்கியது முதல் இந்த மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் மருத்துவ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23ஆம் தேதி) குறிப்பிட்டார்.
இந்த மூளைக் காய்ச்சலின் பரவலுக்கான காரணம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆயினும், இந்தியாவில் தற்போது நிலவும் அதிவெப்பம் இதற்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்களில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். வேறு சிலரோ, முஃப்ஸஃபாபூர் நகரில் விளைந்த ‘லைச்சி’ பழத்திலுள்ள நச்சுப்பொருளே காரணம் என்கின்றனர். ஆனால், உயிரிழந்த தங்கள் பிள்ளைகள் அந்தப் பழங்களைச் சாப்பிடவில்லை என்று அவர்களின் பெற்றோர்கள் கூறினர்.
2014ஆம் ஆண்டில் பீகாரில் மூளைக்காய்ச்சல் பரவியதில் 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.