தலைக்கவசம் அணியாத பெண் ஓட்டுநர்களுக்கு ரோஜா மலர்

போக்குவரத்து விதிகளை மீறும் பெண்கள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (முன்னாள் அலகாபாத்) நகரில் புதுமையான முறையில் தண்டிக்கப்படுகிறார்கள். தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் பெண்களை வழிமறிக்கும் போக்குவரத்து போலிசார் அவர்களுக்கு அபராதம் விதிப்பர்.

அதேநேரம் போலிசாருடன் அணிசேர்ந்திருக்கும் பொதுநலத் தொண்டர்கள் அந்தப் பெண்களுக்கு ரோஜா பூக்களைக் கொடுப்பார்கள். மேலும் அந்த ரோஜாவை அணியச் செய்து அவர்களின் முகத்தை கண்ணாடியில் காட்டுவார்கள். விதிகளை மீறியதற்காக தாங்கள் இவ்வாறு செய்யப்படுகிறோம் என்பதை உணர்ந்து அந்தப் பெண்கள் மீண்டும் அதே தவற்றைச் செய்யாமல் இருக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலிசார் கூறினர். இடைவார் அணியாமல் கார் ஓட்டிச் செல்லும் பெண்களும் இவ்வாறு புதுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

அண்மையில் தொடங்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு நல்ல பலன் கிட்டி வருவதாக பிரயாக்ராஜ் நகர போக்குவரத்து போலிசின் கூடுதல் கண்காணிப்பாளர் ஆர் பி டோஹ்ரே கூறினார். இந்தப் புதுமையான தண்டனை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!