பாட்னா: மூளைக்காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகளின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பீகாரில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சமும் கவலையும் நிலவுகிறது.
இதுவரை மூளைக்காய்ச்சலுக்கு 262 குழந்தைகள் பலியாகி உள் ளன. முசாஃபர்பூர் நகரில் மட்டும் 131 குழந்தைகள் பலியாகி உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்க லாம் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு பதிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக பீகார் மாநிலம் முழுவதும் மூளைக்காய்ச் சல் பரவி வருகிறது. இதில் பச்சி ளம் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் பீகாரில் ஆய்வு மேற் கொண்டது. இதையடுத்து ஆய் வில் ஈடுபட்ட குழுவினர் முதற் கட்ட அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர்.
அதில் தற்போது நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரண மாகவே மூளைக்காய்ச்சல் ஏற்படு வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்குத் தான் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்ப தாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் காய்ச்சல் பரவலைத் தடுக்க உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளனர்.
விழிப்புணர்வு பிரசாரங் களை முன்னெடுத்து, மூளைக் காய்ச்சல் குறித்த சரியான தகவல்களைக் கொடுத்திருந் தால், இவ்வளவு குழந்தைகளின் உயிர் பறிபோயிருக்காது என் றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.