பதவி விலகலால் ஆட்டம்காணும் கர்நாடகா சட்டமன்றம்

கர்நாடகாவில் பதினான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென பதவி விலகியுள்ளதால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. பதவி விலகியவர்களில் 13 பேர் கங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை உறுப்பினர்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பதவி விலக முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர்.

“இப்போது 21 கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர், “ என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா தெரிவித்திருக்கிறார்.

பதவி விலகலுக்குப் பின் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா கூட்டணியைச் சேர்ந்த 118 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை 104ஆகக் குறைந்துவிடும். இதைத் தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கத்திற்கான வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையை இழந்திருக்கும் கர்நாடக அமைச்சர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் ஷோபா கரன்ட்லஜே தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!