அமராவதி: அந்த்ராக்ஸ் கிருமி பாதிப்பு இருப்பதாக கருதப்படும் இருவருக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப் பட்டு வருவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. அங்குள்ள மதகாடா பகுதியில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேரந்த இரு
வர் கையில் கொப்பளங்களுடன் கூடிய அந்த்ராக்ஸ் கிருமி பாதிப்பு அறிகுறிகளுடன் காணப்பட்டதாக தெரிகிறது. அப்பகுதி
யில் வேறு நபர்களுக்கும் கால்நடைகளுக்கும் இப்பாதிப்பு உள்ளதா என கண்டறியும் பணி துவங்கி உள்ளது. அந்த்ராக்ஸ் கிருமி பாதிப்பு இறைச்சி மூலம் எளிதில் பரவும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

