ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரியும் லாவண்யா என்ற பெண் அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறந்த தாசில்தார் விருதை வழங்கி மாநில அரசாங்கம் சிறப்பித்தது. அதே அதிகாரி இன்று லஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதாகி இருக்கிறார்.
ஹைதராபாத்தில் ஹயத் நகர் பகுதியில் வசித்து வரும் லாவண்யா வேலை செய்யும் அலு வலகத்தில் அனந்தையா என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற விவசாயிக்கு அரசாங்கம் பல குறைபாடுகளு டன் கூடிய ஆவணங்கைளைக் கொடுத்ததாகக் கூறப்பட்டது. அவற்றைச் சரிப்படுத்த அதிகாரி அனந்தையாவை அந்த விவசாயி நாடினார்.
வேலையை முடித்துத்தர மொத்தம் ரூ.8 லட்சம் செலவாகும் என்றும் அதில் ரூ.5 லட்சம் தாசில் தாருக்கும் ரூ.3 லட்சம் தனக்கும் சேரும் என்றும் அனந்தையா அந்த விவசாயியிடம் கூறினார். அதனை அடுத்து பாஸ்கரிடமிருந்து ரூ.4 லட்சத்தைப் பெற்றபோது அதிகாரி அனந்தையா கையுங்களவுமாக சிக்கிக்கொண்டார்.
விவசாயி பாஸ்கர், சில நாட்கள் கழித்து தனது பிரச் சினையைத் தீர்க்கக் கோரி தாசில்தார் லாவண்யா காலில் விழுந்தார். இதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங் களில் பரவியது. அதேவேளை யில் ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் பாஸ்கர் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து தாசில்தார் லாவண்யாவிடம் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புகாரை லாவண்யா மறுத்த போதிலும் அதிகாரிகள் லாவண்யா வீட்டைச் சோதனை யிட்டனர். ரூ.93.5 லட்சம் ரொக் கம், 400 கிராம் தங்கமும் பறி முதல் செய்யப்பட்டது. லாவண்யா கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
சிறந்த தாசில்தார் விருது பெற்ற ஓர் அதிகாரியே இப்படி ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருப்பது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பாகி உள்ளது.