டேராடூன்: உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏ குன்வார் பிரணாவ், தனது காருக்கு 0001 என்ற பதிவு எண்ணைப் பெற ரூ.5.51 லட்சம் கொடுத்ததாக வட்டார போக்குவரத்து கூடுதல் அதிகாரி அர்விந்த் பாண்டே தெரிவித்தார். இந்த எம்எல்ஏ ஒரு காணொளி விவகாரம் தொடர்பில் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
30 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வந்து 200 ரூபாய் கடனை அடைத்த கென்யா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்
அவுரங்காபாத்: ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி என்ற நாடாளு மன்ற உறுப்பினர், முப்பது வருடங் களுக்கு முன்பு 1985 முதல் -1989 வரை மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் படித்து பட்டம் பெற்றார்.
அப்போது அவர் கல்லூரியில் படிக்க பணம் இல்லாமல் சிரமப்பட் டதை அறிந்த மளிகைக் கடைக்காரரான காஷிநாத் காவ்லி என்ப வரும் அவரின் குடும்பத்தாரும் ரிச்சர்ட் டோங்கிக்கு 200 ரூபாய் கொடுத்து உதவினர்.
படிப்பு முடிந்து தாய் நாடு திரும்பிய ரிச்சர்ட் டோங்கி கடனை அடைக்க பணம் இல்லாததால் என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து இந்தக் கடனை திருப்பிப் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் கென்யா சென்றுவிட்டார்.
கென்யாவில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப் பினரானார். என்றாலும் ரிச்சர்ட் டோங்கி அந்தக் கடனை மறக்கவே இல்லை.
இந்த நிலையில், 30 ஆண்டு களுக்கு முன்பு நடந்ததை மறக்காமல் சில நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் இந்தியா வந்த ரிச்சர்ட் டோங்கி, காவ்லியை அவரின் வீட்டில் சந்தித்து கடனை அடைத்து காவ்லியின் குடும்பத் தாரை திக்குமுக்காடச் செய்து விட்டார்.