பணம், பதவிக்கு ஆசைப்பட்டு பதவி விலகக்கூடாது

பெங்களூரு: ஒருவர் பணத் துக்காகவும் அதிகாரத்துக்காகவும் ஆசைப்பட்டு தங்கள் பதவி விலகுவது சரியல்ல என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவியான அனிதா குமாரசாமி எம்எல்ஏ கூறியுள்ளார்.

சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அனிதா குமாரசாமி, "கட்சி, அரசியல் என்றால் சின்ன சின்ன பிரச்சினைகள் இருப்பது வழக்கம்தான். அதை உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக எம்எல்ஏக் கள் பதவி விலகக்கூடாது.

"எம்எல்ஏக்கள் கட்சிக்கு உட்பட்டு நடக்காமல் போனால் அதிருப்தி ஏற்படும். ஆனால் குமாரசாமியிடம் அப்படி எந்த ஒரு அதிருப்தியும் இல்லை. எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் திரும்பவும் எங்களிடமே வந்து சேர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

"வெற்றி பெற்றபிறகு ஒவ்வொரு எம்எல்ஏவும் மக்கள் சேவை செய்யவேண்டும். ஆனால் வெற்றிபெற்ற பிறகு பணம், அதிகாரத்துக்காக கட்சியை விட்டு விலகிச் செல்வது நல்லதல்ல," என்று அனிதா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!