சித்தராமையா: கூட்டணி  ஆட்சிக்கு ஆபத்தில்லை

பெங்களூரு: ஒருபுறம் பதவி விலகிய கர்நாடகா அமைச்சரை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர்கள் இறங்கியுள்ள நிலையில், மறுபுறம் நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றிபெறுவது நிச்சயம் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமியின் மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், காங்கிரசில் நிலவிய உட்கட்சி பூசல், மஜத தலைமை மீது எழுந்த அதிருப்தி காரணமாக இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவி விலகினர்.

ஆனால் இந்த பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்காமல் காலம் தாழ்த்தியதால் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி பதவி விலகிய கர்நாடக மூத்த அமைச்சர் எம்.டி.பி.நாகராஜை காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து, பதவி விலகும் முடிவை மறுபரிசீலனை செய்து வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி உள்ளனர்்.

இதற்கிடையே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறுகையில், "குமாரசாமியும் நானும் ஆழமாக விவாதித்தபிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முடிவுக்கு வந்துள்ளோம். ராமலிங்க ரெட்டி எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றிபெறும்.

"இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறும் எடியூரப்பா, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டியதுதானே? அவர் ஏன் பயப்படுகிறார்," என்று கேள்வி எழுப்பியுள்ளார் சித்தராமையா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!