புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி, தனது தொழில் பங்காளிகள் மூவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார்.
"எனது கையெழுத்தை எனக்கே தெரியாமல் முறைகேடாகப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிடமிருந்து எனது தொழில் கூட்டாளிகள் மூவர் ரூ.4.5 கோடி பணம் கடன்பெற்றுள்ளனர்.
"எனது கணவர் வீரேந்திர சேவாக்கின் பெயரையும் அவர்கள் தவறாகப் பயன்படுத்தி் இந்த கடனை வாங்கியுள்ளனர். இதுநாள் வரை இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் கடனுக்காக முன்தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணமின்றி் திரும்பிச்சென்றுள்ளன. வேண்டுமென்றே என்னை இந்தப் பிரச்சினையில் சிக்க வைத்துள்ள தொழில் கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று ஆர்த்தி புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிசாரின் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.
இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த கடனுக்காக முன் தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இன்றி திரும்பச் சென்றுள்ளன.