ஹிமாச்சலப் பிரதேசத்தில் இடிந்து விழுந்த கட்டடம்; 13 பேர் பலி

இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பலமாடிக் கட்டடம் திடீரென இடிந்து தரைமட்டமானதில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டடச் சிதைவுகளிலிருந்து இதுவரை 17 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தனர். ராணுவ அதிகாரிகள் எழுவர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. கட்டடம் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் இதன் தொடர்பில் முழு விசாரணை நடத்தப்படும் என்றும் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பருவ மழையால் இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!