சந்திரயான்-2 ஏவப்படுவது கடைசி நேரத்தில் நிறுத்தம்

கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் எனும் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.

அவ்விண்கலம் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து எடுத்து அனுப்பிய படங்கள் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது முதன்முதலாக உறுதிசெய்யப்பட்டது.

அத்திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவை விரிவாக ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது.

அதன்படி, ரூ.610 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அந்த விண்கலம் நேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் 56 நிமிடங்களுக்கு முன் அம்முயற்சி நிறுத்தப்பட்டது. அந்த விண்கலம் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பும் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ நான்கு முறை திட்டமிடப்பட்டு, பின் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், "சரியான நேரத்தில் கோளாற்றைக் கண்டுபிடித்ததே பெரிய சாதனைதான்," என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி ரவி குப்தா குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!