பாட்னா: இந்தியாவில் கல்வியறிவுடைய பெண்களின் கருவுறுதல் விகிதம் தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ளதாக 2017ஆம் ஆண்டின் மாதிரி பதிவு அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைவானதற்கு அவர்களின் கல்வியறிவே காரணமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.2 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2013 முதல் 2016 வரை பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.3 ஆக இருந்தது.
நாட்டிலேயே அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 3.2 ஆக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. நாட்டிலேயே தென் மாநிலங்களான தமிழ்நாடு (1.6), ஆந்திரப் பிரதேசம்(1.6), கேரளா(1.7), தெலுங்கானா(1.7), கர்நாடகா(1.7) ஆகிய மாநிலங்களில் பெண்கள் கருவுறுதல் விகிதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. படம்: ஊடகம்