ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு; சந்தேகத்தில் 14 பேர் கைது

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14 பேரை ேதசிய புலனாய்வு முகவை அதி காரிகள் கைதுசெய்துள்ளனர்.

இந்த 14 பேரும் விசாரணைக்காக நேற்று இந்தியத் தலைநகர் டெல்லிக்கு அைழத்துச்் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து நடந்து வந்த தேடுதல் நடவடிக்கைகள், சோதனைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூரில் கைதாகிய எழுவருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பிருக்கலாம் என்றும் இவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதுபோல் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நால்வரை சென்னையிலும் மற்ற குற்றவாளிகளை தேனி, மதுரை, நாகப்பட்டினத்திலும் அதிகாரிகள் கைது செய்தனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி இந்த 14 பேரையும் கைது செய்துள்ள அதிகாரிகள், அவர்களைத் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, நாகை மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகையில் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோர் கைதாகி்னர். அவர்களிடம் இருந்து கணினிகள், மடிக்கணினிகள், கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!