புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14 பேரை ேதசிய புலனாய்வு முகவை அதி காரிகள் கைதுசெய்துள்ளனர்.
இந்த 14 பேரும் விசாரணைக்காக நேற்று இந்தியத் தலைநகர் டெல்லிக்கு அைழத்துச்் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து நடந்து வந்த தேடுதல் நடவடிக்கைகள், சோதனைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூரில் கைதாகிய எழுவருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பிருக்கலாம் என்றும் இவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதுபோல் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நால்வரை சென்னையிலும் மற்ற குற்றவாளிகளை தேனி, மதுரை, நாகப்பட்டினத்திலும் அதிகாரிகள் கைது செய்தனர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி இந்த 14 பேரையும் கைது செய்துள்ள அதிகாரிகள், அவர்களைத் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, நாகை மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகையில் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய ஊர்களில் நடந்த சோதனையின் முடிவில் ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோர் கைதாகி்னர். அவர்களிடம் இருந்து கணினிகள், மடிக்கணினிகள், கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
.