திருமலை: திருப்பதியில் உள்ள 5 அணைகளில் 2 அணைகள் தண்ணீரின்றி வறண்டு போய்விட்டதால் திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் 70,000 முதல் 80,000 பக்தர்கள் வரை திருமலைக்கு வருகின்றனர். திருமலையில் உள்ள தேவஸ்தான விடுதிகள், தனியார் மடங்களில் 40,000 பக்தர்கள் வரை தங்குகின்றனர். தற்போது மழை பெய்தால் தண்ணீர் வரத்து இருக்கும். இல்லையெனில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு தண்ணீர் விநியோகம் செய்யமுடியாமல் அவதிப்படும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.