கர்நாடகாவில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது

பல கோடி மதிப்பிலான ஐஎம்ஏ ஊழல் வழக்கு தொடர்பிலான சிறப்பு விசாரணைக் குழு ஒன்று, மாநில அரசுக்கு எதிராக மாறிய காங்கிரஸின் ரோஷன் பெய்க்கைக் கைது செய்திருப்பதாக கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் பாஜக தலைவர் எடியூரப்பாவின் தனிப்பட்ட உதவியாளர் சந்தோஷுடன் திரு பெய்க் தனியார் விமானத்தில் மும்பைக்குப் புறப்படவிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஊழல் வழக்கை எதிர்நோக்கும் முன்னாள் அமைச்சர் தப்பிப்பதற்கு பாஜக துணை நிற்பது வருத்தத்திற்குரியது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக அரசைப் பலவீனப்படுத்த பாஜக முயல்வதை இது காட்டுவதாகவும் அவர் கூறினார். ஆனால் பாஜகவோ, திரு குமாரசாமி தற்போது ஆட்டம் காணும் தனது அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகத் திரு பெய்க்கை விசாரணை அதிகாரிகளைக் கொண்டு மிரட்டுவதாகத் தெரிவித்தது.

இதற்கிடையே, கர்நாடகாவின் மாநில அமைவில் முதலமைச்சர் குமாரசாமியின் தலைமையிலான நிர்வாகம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற கூட்டணியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. இந்த வாக்கெடுப்பு ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!