பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் வியாழனன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்று முழுவதும் பாஜகவின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் மீண்டும் உத்தர விட்டிருந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில் வெள்ளிக் கிழமை காலை கூடியது.
அப்போது முதல்வர் குமாரசாமி உரையாற்றினார்.
இதையடுத்து தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினர். இதனால் மதியம் 1.30 மணி தாண்டியும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இதற்கிடையே மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகருக்கு மாநில ஆளுநர் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் குமாரசாமி, “மாலை ஆறு மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகர் கையில்தான் உள்ளது,” என்றார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் 79 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்றுள்ளன. ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும், 2 சுயேச்சைகளும் குமாரசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் திடீரென பதவி விலகினர்.
பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இரண்டு சுயேச்சை களும் ஆதரவை மீட்–டுக்கொண்டு பாஜக பக்கம் சாய்ந்தனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி வில–க–லால் குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதே சம–யத்–தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் பதவி வில–கல் கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. இதற்கிடையே அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் உச்ச நீதி–மன்–றத்–தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது பதவி வில–கலை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி–மன்–றம், “ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்,” என்று கூறி–யது. இந்தச் சூழ்–நி–லை–யில் வாக்–கெ–டுப்–புக்–குத் தயார் என்று முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.
அதன்படி நம்பிக்கை வாக் கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.