வறட்சி: கிராமத்தை விற்க விவசாயிகள் விளம்பரம்

மும்பை: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால் விவசாயக் கடனைக் கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் கிராமம் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வைத்துள்ளனர்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் 'முதல்வரே இந்த கிராமம் விற்பனைக்கு' என்று மிகப்பெரிய பதாகையை வைத்துள்ளனர்.

இது பற்றி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

தங்களது கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றாலோ, பயிர் காப்பீடு கிடைக்கவில்லை என்றாலோ நாங்கள் கூட்டாக உயிரை மாய்த்துக் கொள்வோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

விதர்பாவின் மற்ற பிற கிராமங்களைப் போலவே டக்டோடா கிராமமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 3,000 ஆயிரம் பேர் பயிர் கடன்களைத் திரும்பச் செலுத்தவில்லை.

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், "விவசாயக் கிணறுகள் வறண்டுவிட்டன.

ஏராளமான பணத்தைச் செலவிட்டு பயிரிட்ட பயிர்கள் நீரின்றி காய்ந்துவிட்டன.

"விவசாயக் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் காய்ந்துவிட்டதால் கடனைத் திருப்பிச் செலுத்துவது முடியாமல் போனது.

"இப்போது நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது?

"மேலும், நாங்கள் வங்கிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் பெற்று விவசாயம் செய்தோம்.

"ஆனால் அதனை எங்களால் திரும்ப எடுக்க முடியவில்லை. ஒரு லட்சத்துக்கு ரூ.15,000 வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

"அந்த வட்டியைக்கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.

"அதனால்தான் எங்கள் கிராமத்தையே விற்றுவிடலாம் என்று விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளோம்," என்கிறார்கள் கனத்த குரலில்.

மாநில அரசும் தங்களை கைவிட்டுவிட்டதால் வாழ்க்கையை ஓட்டுவதற்கு செய்வதறியாது தவிக்கின்றோம் என்கின்றனர் விதர்பாவின் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!