நாட்டுப் பசு இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்து

புதுடெல்லி: நமது நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் நாட்டு மாடுகள் இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மாத்தளா சந்திரபதி ராவ் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். நமது நாட்டில் ஏராளமான நாட்டுப் பசுக்கள், காளைகள் இருந்து வருகின்றன. இவை 35,000 ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட்டில் இருந்து வருபவை. ஆனால் இந்த இனங்கள் தற்போது வேகமாக அழிந்து வருகின்றன. இனப்பெருக்கத்துக்காக வெளிநாடுகளில் இருந்து காளைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் உள்நாட்டுக் காளை இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. மேலும் இனப்பெருக்கத்துக்கு அவை பயன்படுத்தப்படாததால் அந்தக் காளைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன.

இதுதொடர்பாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) வழக்குத் தொடுத்தேன். ஆனால் அங்கு எனது கோரிக்கை ஏற்கப் படவில்லை. நாட்டுப் பசுக்கள், காளைகள் இனம் அழிவதைத் தடுக்கவும், வெளிநாட்டிலிருந்து காளைகளை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், பல்லுயிர் பெருக்க வாரியங்கள் உள்ளிட்ட 90 அமைப்புக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!