‘தகவல் ஆணையத்தை மத்திய அரசு இடையூறாக பார்க்கிறது’

புதுடெல்லி: பொது மக்கள் தகவல் அறிய கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்தச் சட்ட மசோதா கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆர்டிஐ மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படவுள்ளது.

மாநிலங்களவையில் மத்திய அரசின் பலம் அதிகம் இல்லாததால், இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போதைய ஆர்டிஐ-யை மத்திய அரசு இடையூறாக பார்க்கிறது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு நிகராக உள்ள மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பறிக்க அரசு முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!