கர்நாடகாவில் வாகை சூடிய பாஜக

பொதுத்தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்று வென்ற பாரதிய ஜனதாக் கட்சி, கர்நாடகாவின் மாநில சட்டமன்றத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணியை பாரதிய ஜனதா ஆறு வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

பாஜக அரசு அமைந்துள்ள ஒரே தென்னிந்திய மாநிலம் கர்நாடகா.

“கர்நாடகாவின் மக்கள் எங்கள் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நேர்மையான, தொலைநோக்கு பார்வை கொண்ட நிர்வாகத்தை நாங்கள் வழங்குவோம்,” என்று பாஜக மாநில அமைச்சர் ஜெ. சி மதுசுவாமி தெரிவித்தார்.

மாநில முதலமைச்சர் குமாரசாமி வேறு வழியின்றி பதவி விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் தமது பதவி விலகல் கடிதத்தை மாநில ஆளுநர் வஜ்ஜுபாய் வலாவிடம் கொடுத்தார்.

இந்தியாவின் வடக்கு, மேற்குப் பகுதிகளைத் தாண்டி தனக்கான ஆதரவை விரிவுபடுத்த பாஜக முயன்று வருகிறது. மாநிலக் கட்சிகளே மேலோங்கும் தென்னிந்தியாவிற்குள் கால்பதிக்க கர்நாடகாவை ஒரு முக்கிய படிக்கல்லாக பாஜக கருதுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!