கர்நாடகா: ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த ஆட்சியை பாஜக கவிழ்த்துவிட்டு இருக்கிறது என்றும் இத்தகைய காரியம் இதுவரையில் இந்திய அரசியலில் நடந்ததே இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குறைகூறி இருக்கிறது.
பாஜகவின் சதியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி அறிவித்தார்.

“எல்லாவற்றையுமே விலை கொடுத்து வாங்கி விட முடியாது என்பதை ஒரு நாள் பாஜக உணரும். ஒவ்வொருவரையும் முட்டாள் ஆக்க முடியாது. மிரட்டவும் முடியாது. பொய் என்றாவது ஒரு நாள் வெளியே வந்தே தீரும்,” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கூறினார்.

“இந்தியாவில் பாஜக பல சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. நன்கு நிலைபெற்ற அமைப்புகளைக் கீழறுத்து வருகிறது. மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கவில்லை. ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகிறது,” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இந்தியாவில் அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை நான்காகக் குறைந்துவிட்டது. பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!