குஜராத்தைச் சேர்ந்த இளம் பெண் போலிசார், தாம் பணிபுரியும் நிலையத்திலேயே ஆடிக்கொண்டிருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அர்ப்பிதா சௌதரி என்ற அந்த அதிகாரி ஜூலை மாதம் 20ஆம் தேதி தன்னைத் தானே காணொளி எடுத்துக்கொண்டார்.
“போலிஸ் படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும். வேலை செய்யவேண்டிய நேரத்தில் சீருடையில் இல்லாமல் தன்னைத் தானே காணொளி எடுத்துக்கொண்டதால் அவர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,” என்று போலிஸ் நிலையத்தின் துணை சூப்பரின்டென்டன்ட் மஞ்சிதா வன்சாரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.