புலியை அடித்தே கொன்றனர்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் புலியை அடித்தே கொன்றதாக கிராமத்தினர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.
அந்த மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிலிபிட்பு என்ற புலிகள் காப்பகத்தில் இருந்த 6 வயதான பெண் புலி அருகே உள்ள மடைனா என்ற கிராமத்திற்குள் புகுந்து ஒன்பது பேரைத் தாக்கியது. இதனால் பயந்துபோய் கோபம் அடைந்த அந்தக் கிராமத்தினர், அந்தப் புலியை பெரிய கம்புகளால் தாக்கிக் கொன்றனர். இதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் சென்றபோது, படுகாயம் அடைந்த புலியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மக்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அந்த புலி அங்கேயே மரணமடைந்தது.

கிராமத்தினர் 31 பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!