புதுடெல்லி: ஐந்து இளையர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
ஐந்து பேரும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் கிழக்கு டெல்லி பகுதியில் காரில் வேகமாகச் சென்றனர்.
அப்போது அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இருவர் அங்கேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
காரில் இருந்து மதுப்புட்டிகள், சிகரெட் உறைகள் சில பறிமுதல் செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.