மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசின் எம்எல்ஏக்கள் மூவர் பாஜகவுக்குத் தாவினர்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.

இதற்கிடையே, வரும் அக்டோபர் மாதத்தில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் பாரதிய ஜனதா, சிவசேனா ஆகிய கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மும்பை வடாலா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காளிதாஸ் கோலம்கர் நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைபவ் பிச்சாத் (அகோலா தொகுதி), சிவேந்திர ராஜே போசலே (சத்தாரா), சந்தீப் நாயக் (ஐரோலி) ஆகியோரும் தஙகளது பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தனர்.

இந்நிலையில், பதவி விலகிய தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் நேற்று மகாரா‌ஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!