உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்ற இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் உடல்நிலை மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு மருத்துவர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

உன்னாவ் பெண்ணுடன் விபத்தில் சிக்கிய அவரது வழக்கறிஞர் மகேந்திர சிங்கின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பா.ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் கைதானார். இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த பெண், அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர் மகேந்திரசிங் உள்ளிட்ட நால்வர் கடந்த வாரம் காரில் சென்றபோது வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர்.

பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

லக்னோவில் உள்ள கேஜிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மாதும் அவரது வழக்கறிஞரும் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!