ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க இந்தியாவின் மத்திய அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணையத்தள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுதந்திர தினத்திற்குப் பிறகு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக் கொடியேற்ற இருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார்.