அபிநந்தனுக்கு நாளை உயரிய தேசிய விருது

டெல்லியில் நாளை நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் இந்திய ஆகாயப்படை வீரர் 'விங் கமாண்டர்' அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஆகாயப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமானுக்கு ராணுவத்தின் மூன்றாவது உயரிய விருதான வீர்சக்ரா விருது வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ஆகாயப்படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

டெல்லியில் நாளை நடக்கும் நாட்டின் 73வது சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருதும், பாலகோட் தாக்குதலைத் தலைமை தாங்கி நடத்திய இந்திய ஆகாயப்படை குழுத் தலைவர் மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்பட உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!