பிரதமர் நரேந்திர மோடி : பெரிய முடிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்டதைக் காட்டிலும் பெரிய முடிவு எதுவும் இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இரண்டாவது முறை பிரதமராகப் பதவியேற்று 75 நாட்களை நிறைவு செய்துள்ள திரு மோடியை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி கண்டது.

அப்போது, தங்களது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், 75 நாட்களில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சரியான நோக்கங்கள், தெளிவான கொள்கைகள் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சந்திரயான் 2, முத்தலாக் தடைச் சட்டம், நீர் விநியோகம் மற்றும் மேலாண்மைக்காக ‘ஜல் சக்தி’ அமைச்சகம் உருவாக்கப்பட்டது என பல்வேறு திட்டங்களை அவர் எடுத்துரைத்தார்.

தீவிரவாதிகள் மீது பரிதாபம் கொண்டோரும் பரம்பரை அரசியல்வாதிகளும்தான் காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்கின்றனர் என்ற திரு மோடி, “இது நாட்டு நலன் சார்ந்த பிரச்சினை. மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் மேம்படுத்தப்படும்,” என்று குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!