'சமய சார்புகொண்ட பாஜகவை எதிர்கொள்ள கொள்கைகள் கொண்ட கட்சியே தேவை'

புதுடெல்லி: காங்கிரஸ் போன்ற வலிமையான கொள்கைகள் கொண்ட ஒரு கட்சியால்தான் சமயவெறி கொண்ட பாஜகவை எதிர்கொள்ள முடியும் என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேரு குடும்பத்தினரைத் தவிர மற்றவர்கள் காங்கிரசை வழிநடத்துவது கடினம் என்றார். பாரதிய ஜனதா தற்போது மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், இது ஒரு கொள்கையற்ற செயல் என்றார்.

“இதே நிலை நீடித்தால் மாநிலக் கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். இதனால் நாடு இரு துருவ அரசியல் தலைமையை நோக்கிச் செல்லும். அவ்வாறு இரு துருவ அரசியல் வந்துவிட்டால் நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எனவே, காங்கிரசுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது,” என்றார் ஆதிர் ரஞ்சன்.

சோனியா காந்தி கட்சிக்கு மீண்டும் தலைமை ஏற்க தயக்கம் காட்டியது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி பதவி விலகியதால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூத்த தலைவர்கள் சோனியாவிடம் விவரித்ததாகத் தெரிவித்தார்.

எனினும் சோனியா காந்தி காங்கிரசின் இடைக்காலத் தலைவராக மட்டுமே பொறுப்பேற்றுள்ளதாக ஆதிர் ரஞ்சன் தெளிவுபடுத்தினார். கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் முயற்சிகள் நீடித்து வருகின்றன என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!