காஷ்மீரின் ஆகப் பெரிய நகரமான ஸ்ரீநகரில் இந்திய அதிகாரிகள் கூடுதலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். போலிசாருக்கும் வட்டாரவாசிகளுக்கும் இடையே நேற்று நிகழ்ந்த இரவு நேர கைகலப்பிற்குப் பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி, அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததை அடுத்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் இரவின்போது இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீது 47 தடவை கற்கள் தூக்கி எறியப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் அதே போல 20 தடவை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியப் படையினரும் தங்கள் பங்கிற்கு ஆர்ப்பாட்டக்கார்களிடம் வன்முறையுடன் நடந்துகொண்டதாகச் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. உருளைக்கல் குண்டுகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்படுவதாகவும், காயமடைந்த அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
சம்பவங்களில் காயமடைந்தோரின் எண்ணிக்கை குறித்த ராய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
காஷ்மீரில் ஊரடங்கு போன்ற சூழல் நிலவுகையில் 500க்கும் அதிகமானோர் அமைதியைக் குலைக்க முயன்றதன்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.