காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் நால்வரை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டனர். காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தாவி நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தில் அங்கிருந்த மீனவர்கள் நால்வர் சிக்கிக்கொண்டனர். இவர்களில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் இருவரும் ஆற்றின் குறுக்கே இருந்த திட்டின் மீது ஏறி உயிர் தப்பினர். இதைக் கண்ட அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப்படை வீரர் ஒருவரை இறக்கி், அவர்கள் உடலில் ஹெலிகாப்டரோடு இணைக்கப்பட்டிருந்த கயிறுகளைக் கட்டி இரு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். விமானப்படை வீரர்களின் துரித நடவடிக்கையால் மீனவர்கள் நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஜம்மு பகுதிக்கான விமானப்படை அதிகாரி சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்
வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்
21 Aug 2019 08:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Aug 2019 08:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!