26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் 73 வயதான திரு சிதம்பரத்திற்கு முன்பிணை வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரிப்பதற்காக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் பலரும் டெல்லியில் உள்ள திரு சிதம்பரத்தின் வீட்டிற்கு விரைந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இருந்தே திரு சிதம்பரம் தமது வீட்டில் இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்திற்குச் சென்ற அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதன்பின் வீடு திரும்பிய அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின் நேற்று முன்

தினம் இரவுப் பொழுது முழுவதும் சிபிஐ தலைமையகத்திலேயே அவர் கழித்தார். 2011ல் திரு சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது அவர்தான் சிபிஐயின் அந்தப் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் நேற்று முற்பகலில் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறின. பின்னர் பிற்பகலில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

திரு சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் காங்கிரஸ் தலைவர்களுமான திரு கபில் சிபலும் திரு அபிஷேக் சிங்வியும் முன்னிலையாகி வாதாடினர். சிபிஐ தரப்பில் அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா முன்னிலையாகி வாதாடினார்.

விசாரணைக்கு திரு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்றும் அதனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கூட்டுச்சதியை வெளிக்கொணர அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிட்டது. ஆகையால், அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஐ கேட்டுக்கொண்டது.

அதை ஏற்று, திரு சிதம்பரத்தை 26ஆம் தேதி திங்கட் கிழமை வரை சிபிஐ காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதே நேரத்தில், ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் திரு சிதம்பரத்தின் குடும்பத்தாரும் வழக்கறிஞர்களும் அவரைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது, “ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என்மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை. உண்மையில், எந்த நீதிமன்றத்தில் சிபிஐயோ, அமலாக்கத் துறையோ எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்ததில்லை. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையிலும் நான் எந்தக் குற்றம் புரிந்ததாகவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், நானும் என் மகனும் கடுமையான குற்றங்களைப் புரிந்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர்.

“கடந்த 13-15 மாதங்களாக என்னைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எனக்கு முன்பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி என்னுடைய வழக்கறிஞர்கள் எனக்கு அறிவுறுத்தினர். அதையடுத்து, கடந்த இரு நாட்களாக அவர்களுடன் இணைந்து முன்பிணை மனுவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். நான் எங்கேயும் ஓடவில்லை,” என்று திரு சிதம்பரம் கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!