இளையர்கள் இனவாத அரசியலுக்கு இரையாகி விடக்கூடாது என்கிறார் மம்தா

கொல்கத்தா: பாஜகவின் இனவாத அரசியலுக்கு எந்த வகையிலும் அடிபணியப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இளையர்கள் இனவாத அரசியலுக்கு இரையாகி விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியா தற்போது அதிபர் ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“இத்தகவலை படித்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இனி இந்தியாவில் ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி, ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை வரும்.

“மேற்கு வங்கத்தைப் பிடித்துக் காட்டுவோம் என்று சொல்கிறார்கள். அது எப்படி நடக்கிறது என்பதையும் பார்த்துவிடுவோம்,” என்று மம்தா பானர்ஜி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

பாஜக அரசு சில அரசியல் கட்சிகளைக் குறி வைப்பதற்காகவே சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தமது சகோதரரையும் விசாரணைக்கு அழைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

“நாளை என்னையும் அழைக்கலாம். நான் சிறைக்குச் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன். அடுத்த இரண்டாண்டுகளுக்கு உங்களின் ஆதரவு எனக்குத் தேவைப்படுகிறது.

“குதிரைப் பேரம் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

“அடுத்ததாக அவர்களுடைய குறி மேற்கு வங்கம்தான். நாம் அவர்களை எதிர்த்துப் போராடுகிறோம். அதற்காகவே மேற்கு வங்கத்தைப் பிடிக்க அவர்கள் விரும்புகிறார்கள்,” என்றார் முதல்வர் மம்தா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!