மாமல்லபுரத்தில் மோடியும் ஸி ஜின்பிங்கும் சந்திப்பு

மாமல்லபுரம்: பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த கடற்கரை நகரான மாமல்லபுரத்தில் அடுத்த அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளான இந்தியாவும் சீனாவும் தங்களது நாடுகளின் நல்லுறவையும் புரிந்துணர்வையும் மேலும் வளர்ப்பதுடன் முதலீட்டைப் பெருக்கவும் இந்தப் பேச்சுவார்த்தை பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கடற்கரை நகரான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அடுத்த மாதத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்தியா-சீனா இடையிலான இரண்டாவது மாநாட்டையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுடன், வெளியுறவுத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அக்டோபர் 11, 13 ஆகிய இரு நாட்கள் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இதற்காக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு இடையே இரு தலைவர்களும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்ட மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பார்வையிட பிரதமர் மோடியும் சீன அதிபரும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி, சீீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு இடையிலான முதலாவது சந்திப்பு சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்றது. அப்போது அைனத்துலக தரத்துக்கு ஏற்ப இருநாட்டு உறவுகளை மேம்படுத்த முடிவு செய்தனர். சந்திப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வருமாறு ஷி ஜின்பிங்கிற்கு மோடி அழைப்பு விடுத்தார். இதனால் மாமல்லபுரம் ஒளி நகரமாக மாறும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!