மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ; நால்வர் பலி

மும்பை அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) காலை 7 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அதில் குறைந்தபட்சம் நால்வர் உடல் கருகி பலியாகினர். அவர்களில் மூவர் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் என்று கூறப்பட்டது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் மூவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே உரானில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

அங்கு எண்ணெய்க் கழிவுகள் சேமித்து வைக்கும் கிணற்றில் திடீரென பற்றிய தீ, மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவியது. தீப்பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிவாயு எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் விரைந்து வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள், போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எரிவாயு குழாய்களுக்குப் பாதிப்பு இல்லை என ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!