ஹரியானா மாநிலத்தில் அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்ததை அடுத்து அவ்விரு கட்சிகளும் இணைந்து தேர்தல் களம் புகலாம் என்று பலர் கிசுகிசுத்தவண்ணம் உள்ளனர்.
இந்திய தேசிய லோக் தளக் கட்சியிலிருந்து பிரிந்த ஜனநாயக ஜனதா கட்சியுடன் முன்பு கூட்டணி வைத்திருந்த பகுஜன் சமாஜ், அந்தக் கூட்டணியை முறிக்க கடந்த வாரம் முடிவு செய்தது. சட்டமன்ற இட ஒதுக்கீடு குறித்து இரண்டு கட்சிகளும் இணக்கம் எட்டாதது இதற்குக் காரணம்.
இதுவரை காங்கிரஸும் பகுஜன் சமாஜும் இணையப்போதாகக் கூறும் அறிக்கைகளை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி அசாது மறுத்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனியே நின்று போட்டியிடும் என்றும் அவர் கூறினார். கடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸை புறக்கணித்து மாயாவதி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் கடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த இரண்டு கட்சிகளுக்குமே வெற்றி எட்டாக்கனியாக இருக்கும் பட்சத்தில் கூட்டணி சாத்தியமாகலாம்...