படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

1 mins read

ராஜமுந்திரி: கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கண்டிபோச்சம் கோவிலுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் பாப்பிகொண்டலு என்ற சுற்றுலாத்தலத்திற்குச் செல்வதற்காக கோதாவரி ஆற்றில் படகில் சென்றபோது அதிகரித்த நீர்ச் சுழற்சியால் படகு திடீரென்று கவிழ்ந்தது. ஏற்கெனவே 12 பேர் பலியான நிலையில் மேலும் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் இரு சடலங்கள் நேற்றுக் காலை தௌவ்லேஸ்வரம் தடுப்பணை பகுதியில் மிதந்து வந்ததாக தகவல்கள் கூறின. இதனைத் தொடர்ந்து மாண்டோர் எண்ணிக்கை 24க்கு அதிகரித்தது.

மேலும் 20க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரி யாத நிலையில் மீட்புப் பணிகள் தொடருகின்றன. உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.