ஸாகிர் நாயக்கைப் பற்றிய மகாதீரின் கூற்றை மறுத்துள்ள இந்தியா

தற்போது மலேசியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் மத போதகர் ஸாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி இந்திய பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ர‌ஷ்யாவில் திரு மகாதீரைச் சந்தித்தபோது, ஸாகீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டி திரு மோடி கோரினார் என்று அப்போது இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விஜய் கோகலே கூறினார்.

ஆனால் ஸாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் மோடி தம்மிடம் எந்தவிதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்று திரு மகாதீர் அண்மையில் மலேசிய வானொலி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் அப்போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா தீவிரம் காட்டி வருகிறது என திரு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் ஜாகிரை மலேசியாவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தியா கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு ஸாகிர் நாயக்கிற்கு எதிராக மதங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!