புத்தி சொல்லப்போன டிராஃபிக் ராமசாமிக்கு ஏற்பட்ட கதி

திருப்பூர்: விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொள்ள திருப்பூர் சென்ற சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, பல்லடம் ரோட்டில் பலரும் சட்டவிரோதமாக வாகனத்தில் சென்றதைக் கண்டு சாலை விதிகளை அவர்களுக்குப் போதித்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், டிராபிக் ராமசாமி மீது மோதுவதுபோல் வேகமாக வந்து பிறகு தப்பி ஓடிவிட்டார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டிராபிக் ராமசாமி, அந்த வாகன ஓட்டியைப் பிடித்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டு சாலையில் படுத்து போராட்டத்தைத் தொடங்கினார்.

அதைப் பார்த்த சிலர் போக்குவரத்துப் போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். போலிசார் வந்து அமைதிப்படுத்தினார்கள்.

அதனை அடுத்து தனது போராட்டத்தை முடித்துக்கொண்ட டிராஃபிக் ராமசாமி, தொடர்ந்து பலருக்கும் போதித்தபடியே தன்னுடைய காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

டிராஃபிக் ராமசாமியைப் பார்த்த துமே பலரும் தலைக்கவசத்தை அணிந்துகொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். சிலர் அவரைப் பாராட்டினர். சிலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!