புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9ஆம் தேதியும் அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2ஆம் தேதியும் நிறைவடைகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகளும் அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 8.94 கோடி வாக்காளர்களும் அரியானாவில் 1.80 கோடி வாக்காளர்களும் உள்ளனர். இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெறும் என்று ஆணையர் சுனில் அரோரா கூறினார்.