மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் தேர்தல்

புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9ஆம் தேதியும் அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2ஆம் தேதியும் நிறைவடைகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகளும் அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 8.94 கோடி வாக்காளர்களும் அரியானாவில் 1.80 கோடி வாக்காளர்களும் உள்ளனர். இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெறும் என்று ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!