இரண்டு மாம்பழங்களைத் திருடியதற்காக துபாயிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்திய ஊழியர்

துபாய் விமான நிலையத்தில் பணிபுரிந்த இந்திய ஊழியர் இரண்டு மாம்பழங்களைத் திருடியதற்காக அபராதம் செலுத்தி, வேலையிழந்து, தாயகம் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் பயணிகளின் பொருட்களைக் கையாளும் பிரிவில் 27 வயது இந்திய ஊழியர் பணியாற்றி வந்தார். அவர் பயணியின் பை ஒன்றைத் திறந்து எதையோ திருடியதை கண்காணிப்பு காணொளியில் பார்த்ததாக பாதுகாவல் அதிகாரி தெரிவித்ததன் பேரில் போலிசில் புகார் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவரது தங்குமிடத்திலும் சோதனை செய்யப்பட்டது.

தனக்கு மிகவும் தாகமாக இருந்ததால் மாம்பழப் பெட்டியிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்துத் தின்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து, 5,000 திர்ஹாம் ($1,874) அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

அத்துடன் அவர் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!