அருண் ஜெட்லி மனைவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி

புதுடெல்லி: காலஞ்சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதாவை மாநிலங்களவை உறுப்பினராக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கும் மத்திய அரசுக்கும் தனது சிறப்பான பங்களிப்பை அருண் ஜெட்லி வழங்கியிருப்பதால் அவரது உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது குடும்பத்தில் ஒருவரை மாநிலங்களவை எம்பியாக்க பாஜக மூத்த தலைவர்கள் பலரும் விரும்புவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா காஷ்மீரைச் சேர்ந்தவராவார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சங்கீதா பாஜகவுக்கு மிகவும் பயன்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவும் கருதுவதாகத் தெரிகிறது.

மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை களால் காஷ்மீர் மக்கள் எந்த வகையில் பயனடைய முடியும் என சங்கீதா மூலம் பிரசாரம் செய்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்று அமித்ஷா கருதுவதாகவும் ஊடகத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகும் எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!