முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சையது முகம்மது என்பவர், 1984ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த சுபேதா என்பவரை திருமணம் செய்தார். இதையடுத்து உடனடியாக இந்திய குடியுரிமைக்கு சுபேதா விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது. இதனால் விசாவை அவர் பல முறை புதுப்பித்து நீண்டகால விசாவில் இந்தியாவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது. குடியுரிமை வழங்கப்பட்ட சுபேதாவிற்கு வயது 55. அவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்தியர்களை மணந்த சுமார் 25 பாகிஸ்தான் பெண்கள் முசாபர்நகர் மாவட்டத்தில் இன்னமும் நீண்ட கால விசாவில் வசித்து வருவதாக அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.