புதுடெல்லி: உன்னாவ் பாலியல் சம்பவம் தொடர்பிலான கொலைக் குற்றச்சாட்டில் இருந்து பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமி ஒருவர் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து செங்கா் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை 28ஆம் தேதி, ரேபரேலி மாவட்டத்தில் அந்தப் பெண் தனது வழக்கறிஞர், உறவினா்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவா்களின் காா் மீது லாரி ஒன்று மோதியது.
அந்த விபத்தில் அந்தப் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் பலத்த காயமடைந்தனா்.
உடன் வந்த உறவினா் இருவா் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதியப்பட்டது.
இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்ததால் இது குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்திய சிபிஐ, தனது முதல் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருந்து செங்கார் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ஆசிஷ் குமாா் பால் என்பவரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
விபத்து நேரிட்டதில் குற்றச்சதி ஏதுமில்லை என்று சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.