சித்தூர்: கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.20 கோடி பணம், ரூ.150 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கல்கி ஆசிரமத்தின் சாமியார் விஜயகுமார் என்ற கல்கி பக வானின் மகன் கிருஷ்ணா, மருமகள் பித்ரா, ஆசிரமத்தின் துணைத்தலைவர் லோகேஷ் தாசா ஆகியோரை தனித்தனி அறை களில் அமரவைத்து விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.150 கோடி மதிப்பி லான சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் 40 இடங்களில் உள்ள ஆசிரமங்களில் வருமான வரிச் சோதனை பல மணி நேரம் நீடித்தது.
வரி ஏய்ப்பு புகார் எழுந்ததன் தொடர்பில் வரதய்யபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.