சிதம்பரத்துக்கு பிணை கிடைத்தும் வெளியில் வரமுடியாத சூழல்

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஆனால், அமலாக்கத்துறை அவரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்திவருவதால் அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் சிபிஐ நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்டன.

பிணை கோரி ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சிபிஐ தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை மற்றும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கி இன்று உத்தரவிடப்பட்டது.

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு 24ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் முன்னிலைப்படுத்தப்படுவார். அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த பிணை உத்தரவின் அடிப்படையில், ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளியில் செல்வது குறித்து சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!