50 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுமி: உடல்தான் மீட்பு

ஹரியானா: ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் ஞாயிறு மாலை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 50 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஐந்து வயது சிறுமி நேற்று இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கிணற்றில் சிறுமி தலைகீழாக விழுந்ததால் அவரின் கால் மட்டுமே படச் சாதனத்தில் தெரிந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிறுமி சுவாசிப்பதற்காக குழியினுள் ஆக்ஸிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. உயிருடன் மீட்பதற்காக ஆழ்துளைக் கிணற்றின் அருகே பக்கவாட்டில் குழி தோண்டினர். மீட்கப்பட்டவுடன் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

மீட்பு முயற்சி 10 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது என்றும் சிறுமி உடல்தான் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!